பொன்னேரி பாலாஜி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் வெள்ளியன்று (டிச 15), கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுத் தெருவில் வசிக்கும் 23 நரிக்குறவர் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இதில் குடியிருப்போர் நலச் சங்கத்தின் செயலாளர் டி.தனுஷ்கோடி, பொருளாளர் ஏ. ஸ்ரீதர், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் இ.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.