மாநகரப் பேருந்து விபத்து: 5 பேர் காயம்
சென்னை, நவ. 1- கோயம்பேட்டில் இருந்து பயணிகளுடன் மாநகர பேருந்து (தடம் எண் 48 சி) வள்ளலார் நகர் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. வள்ளலார் நகர் மேம்பாலம் அருகே சென்று கொண்டி ருக்கும் போது, குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் பிரேக் அடித்துள்ளார். அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்த போதிலும், ஓட்டுநர் மேம் பாலத்தில் உள்ள சுவரின் மீது மோதி பேருந்தை நிறுத் தினார். இதில் பேருந்தின் முன் பகுதி கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இதில் ஓட்டுநர் உட்பட பயணிகள் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த வர்கள் அவர்களை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் பேருந்தை அப்புறப்படுத்தி னர்.
ஒப்பந்ததாரர் கொலை: நீதிமன்றத்தில் 6 பேர் சரண்
சென்னை, நவ. 1- திருவொற்றியூர் விம்கோ நகர் பூம்புகார் நகர் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் திமுக 5ஆவது வார்டு வட்ட பிரதிநிதியாக உள்ளார். அவரது மகன் பொறியியல் பட்டதாரி காமராஜ் (35). இவர்கள் ஆர்.வி. இன்ஜினியரிங் என்ற பெயரில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வந்தனர். இவர்களது அலுவலகம் வீட்டின் கீழ் பகுதியில் உள்ளது. இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி அலுவலகத்தில் காமராஜ் மட்டும் தனியாக இருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கும்பல் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக அவரை வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து எண்ணூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காமராஜ் கொலை வழக்கில் தொடர்புடைய எண்ணூர் நேரு நகரைச் சேர்ந்த மனோ (எ) மணவாளன் (31), அதே பகுதியை சேர்ந்த தீனி பாய் தினேஷ் (28), ஜேசன் (எ) இளந்தமிழன் (23), அரவிந்தன் (24), அன்னை சிவகாமி நகரை சேர்ந்த ஜிம் கார்த்திக் (24), எண்ணூரை சேர்ந்த ஜமாலுதீன் (28) ஆகிய 6 பேர் கடலூர் நீதிமன்றத்தில் புதனன்று (நவ. 1) சரணடைந்தனர்.
ரேசன் கடைக்கு அடிக்கல்
சென்னை, நவ. 1- சென்னை மாநகராட்சி 4ஆவது மண்டலம் 48ஆவது வார்டு பார்த்தசாரதி நகர் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் ரேசன் பொருட்கள் வாங்க நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் தங்கள் குடியிருப்பு பகுதியில் ரேசன் கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி தனது தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து புதிய ரேசன் கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா புதனன்று (நவ. 1) நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்ட மன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, மண்டலக் குழு தலைவர் நேதாஜி யு.கணேசன், மாமன்ற உறுப்பினர் விஜய லட்சுமி, திமுக சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் த.இளைய அருணா, பகுதிச் செயலாளர் வ.பெ.சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
“ரூட்டு தல” மோதல் சம்பவங்கள் 30 மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்க ரயில்வே போலீசார் கடிதம்
சென்னை, நவ. 1- ரயில் நிலையங்களில் ரூட் தல பிரச்சனை காரண மாக தொடர்ந்து மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் 30 பேரை கல்லூரியில் இருந்து நீக்கம் செய்ய ரயில்வே காவல் துறையினர் கல்லூரி முதல் வருக்கு கடிதம் எழுதியுள்ள னர். கடந்த இரண்டு ஆண்டு களில் மட்டும் ரயில் நிலை யங்களில் மாணவர்க ளிடையே மோதல் சம்பவத்தில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 44 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு நடந்த மோதலில் ஈடுபட்ட மாநிலக் கல்லூரி மாணவர்கள் 15 பேரும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேரும் கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மோதல் சம்பவங்கள் நடைபெற காரணமான மாநிலக் கல்லூரி மாணவர்கள் 30 பேரை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்க ரயில்வே காவல் துறையினர் மாநிலக் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ரயில் நிலையங்களில் மாணவர்கள் மோதலை தடுக்க சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல் துறையினர் இணைந்து மாணவர்கள் பயணிக்கும் ரயில் பெட்டியில் பயணம் செய்து மாணவர்களை கண்காணிக்கவும், ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ள தாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நம்ம சாலை’ செயலி தொடக்கம்
சென்னை, நவ.1- சாலை பாதிப்புகளை புகராக தெரிவிக்கும் வகையில் ‘நம்ம சாலை’ செயலியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை நெடுஞ் சாலைத்துறைக்கு தெரி விப்பதற்காக புதிய செயலி துவக்கப்பட்டுள்ளது. சாலைகளில் உள்ள பள்ளங்களை புகைப்படத்து டன் செயலி மூலம் தெரி வித்தால் புகார் அதிகாரிகள் சென்றடையும். புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் மாநில, 72 மணி நேரத்தில் மாவட்ட சாலைகள் சரி செய்யப் படும் என தகவல் வெளியாகி யுள்ளது.
அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி, நவ 1. ‘பட்டியலின முன்னேற்றத்திற்கு தொண்டு புரிந்தவர்கள் டாக்டர் அம்பேத்கர்’ தமிழ்நாடு அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தகவல். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் பெயரில் பட்டியலின முன்னேற்றத்திற்கு தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் அரசு விருது ஜனவரி மாதம் 2024 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாள் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பலர் அறிய தொண்டாற்றி வருகிறார்கள்.ஆதி திராவிடர்களின் முன்னேற்றத்திற்கான தங்களை இணைத்து, அவர்கள் ஆற்றிவரும் அறிய தொண்டுகளை கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருதை முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழு தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. அண்ணல் அம்பேத்கர் விருது வழங்குவதற்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு முக்கிய முயற்சிகள் மேற்கொள்ள பட்டிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயர பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.கடந்த புத்தாண்டு களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள் குறிப்பிட வேண்டும். இவ்விருதினை பெற தகுதியுடையோர் உரிய விண்ணப்ப படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 10.11.2023 மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகம், கள்ளக்குறிச்சி 606202 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.