districts

பேருந்து கவிழ்ந்து 5 பேர் படுகாயம்

செய்யாறு, ஆக.9-

     ஒரகடகத்திற்கு தனியார் கம்பெனி பேருந்து  சுமார் 40 பேரை ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் -கலவை சாலை வழி யாக சென்று கொண்டிருந்தது. கொடையடம்பாக்கம் அருகே வரும் போது வளைவில் திரும்பிய போது தாறு மாறாக சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில் பேருந்தில் பயணம் செய்த பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். சிறு காயங்களுடன் 35 பேர் உயிர் தப்பினர். படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.