மாமல்லபுரம், ஜூலை 30-
சென்னை அருகே கோவளம் அடுத்த முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் படுகு குழாம் உள்ளது. இங்கு ரூ.50 லட்சம் செலவில் புதிய சுகாதார மையம், குழந்தைகள் விளையாட்டு மையம், கழிவுநீர் சுத்திகரிப்பு, காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. இதை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-மாமல்லபுரத்தில் உள்ள புராண சின்னம் அர்ச்சுனன் தபசு அருகில் ரூ.5 கோடியில், 7 டி.எக்ஸ் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சி அரங்கம் விரைவில் கட்டப்பட உள்ளது. இதில் மாமல்லபுரம் புராதன சின்னங்களின் வரலாறு குறித்து ‘3டி லேசர்’ஒளி, ஒலி காட்சி ஒளிபரப்பு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.