தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 4ஆவது மாநில மாநாடு வடசென்னையில் நடைபெற உள்ளதையொட்டி திருவொற்றியூரில் சிறப்பு கருத்தரங்கம் ஞாயிறன்று (டிச. 11) நடைபெற்றது. பொதுத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் கே.ஆர்.முத்துசாமி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் சிஐடியு வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஜெயராமன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, சிபிஎம் பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் வி.ஜானகிராமன் ஆகியோர் பேசினர்.