25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரை மீது முடிவெடுக்காமல் கிடப்பில் வைத்துள்ள ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்தும், விரைந்து ஒப்புதல் அளிக்க கோரியும் சனிக்கிழமையன்று (அக்.28) எழும்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பேரணி நடைபெற்றது. இதன் நிறைவாக தமுமுக தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சிபிஎம் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை மாலி, தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் பேசினர்.