மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் பகுதிக்குட்பட்ட 44ஆவது வட்டக் கிளைகள் சார்பில் அமைக்கப்பட்ட தோழர் சங்கரய்யா நினைவு பெயர் பலகையை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம் திறந்து வைத்தார். இதில் பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கோடீஸ்வரி, நிர்வாகிகள் பி.சேகர், எல்.உமா, நாராயணன், நீலாவதி, உதயச்சந்திரன், உதயகுமார், சிந்து தேவன், முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.