districts

சென்னை முக்கிய செய்திகள்

இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை,மார்ச் 16- பராமரிப்பு காரணமாக தெற்கு ரயில்வே ஞாயி றன்று சென்னையில் 44 ரயில் களை ரத்து செய்துள்ளது. சென்னை கோடம் பாக்கம்-தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக ஞாயி றன்று சென்னை கடற்கரையி லிருந்து காலை 10.30 மணி  முதல் மாலை 4.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவது மாக ரத்து செய்யப்படு கிறது.  அதேபோல, தாம்பரத்தி லிருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது என  தெரிவித்துள்ளது. தொடர்ந்து 4 வாரங்கள் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் ரயில்கள் ரத்து  செய்யப்படவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.

சென்னை துறைமுகம் சாதனை

சென்னை, மார்ச் 16- சென்னை துறைமுகம் கடந்த 2023 -24-ம் நிதி யாண்டில் மிக அதிகபட்ச மாக 48.99 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு சாதனைப் படைத்துள்ளது என்று சேர்மன் சுனில் பாலிவால் தெரிவித்தார். சென்னை துறைமுகத் தில் இருந்து கார்கள், உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதே போல், வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்கள், மருந்துப் பொருட்கள், மின்னணு மற்றும் மின்சார  சாதனங்கள் உள்ளிட்ட  ஏராளமான பொருட்கள் இறக்குமதி செய்யப்படு கின்றன. இந்நிலையில், கடந்த 2022 -24-ம் நிதியாண்டில் மார்ச் 15-ம் தேதி வரை சென்னை துறைமுகம் இந்த  சாதனையை படைத்துள் ளது.

யானைக்கவுனியில்  ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை, மார்ச் 16- சென்னை யானைக்கவுனியில் வாகன சோதனையின் போது ரூ15 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் ரோடு அருகே யானைக்கவுனி காவல் துறையினர் வெள்ளியன்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கட்டுக்கட்டாக ரூ15 லட்சம் இருப்பது தெரிய வந்தது. ரொக்கத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசார ணையில் சென்னை புரசைவாக்கம் கந்தப்பா தெருவைச் சேர்ந்த முகமது முஸ்தக் (38) என்பதும், அவர் தனியார் ஏஜெண்ட் ஒருவரிடம் பணிபுரிவதும் தெரிய வந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் முஸ்தக்கிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு 
கிருஷ்ணகிரி,மார்ச்.16-  பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை பணியிடத்தில் உறுதி செய்தல், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக புகார் அளிக்கும் நடைமுறை சட்டம் குறித்த பயிற்சி முகாம் கிருஷ்ணகிரியில் குழந்தை கள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைபெற்றது. முகாமினை மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு தொடங்கி வைத்தார். பெண்கள்,குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனங்கள், தூய்மையான முறையில் பராமரிக்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதன்மை வழக்கறிஞர் ரவிச்சந்திரன், குழந்தைகள் நலக்குழும உறுப்பினர்கள், இளஞ்சிறார் நீதிக்குழும உறுப்பினர்கள், நன்னடத்தை அலுவலர் மற்றும் குழந்தைகள் அவசர உதவி மைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதிகாரத்தை காட்டி பணம் பறிக்கும் பாஜக முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடல்

புதுச்சேரி, மார்ச்.16-  அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து மிரட்டி நன்கொடை பத்திரம் பாஜகவினர் வசூலித்துள்ளனர் என்று  முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு. புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சனிக்கிழமை செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டிய விபரத்தை உச்சநீதிமன்றம் தலையீட்டுக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரூ.6 ஆயிரம் கோடி பாஜக நன்கொடை பெற்றுள்ளது. ஊழலே செய்யாத கட்சி என பீற்றிக்கொள்ளும் பாஜக விஞ்ஞான முறையில் ஊழல் செய்துள்ளனர்.  லாட்டரி நிறுவனத்தைச் சேர்ந்தவர் கள் ரூ.1,300 கோடி வரை நன்கொடை அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஒப்பந்தங்களை எடுக்கும் நிறுவனம் பெரியளவில் நன்கொடை அளித் துள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து மிரட்டி நன்கொடை பத்திரம் பாஜகவினர் வசூலித்துள்ளனர்.  இது தொடர்பான முழுமையான விசாரணை வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. பாஜகவின் 9 ஆண்டு ஆட்சியில் ஒரே ஒரு ரயில் திட்டத்தை கூட புதுச்சேரிக்கு கொண்டு வரவில்லை. தற்போது காக்கிநாடா முதல் செங்கல்பட்டு வரை இயங்கிய ரயில் புதுச்சேரி வரை நீட்டிக்கப்பட்ட  திட்டங்களும் காங்கிரஸ், திமுக ஆட்சி இருந்தபோது ஒன்றிய  அரசை  வலியுறுத்தி கடிதம் எழுதிய திட்டங்கள்தான்.  மத்திய ரயில்வே துறை அமைச் சரை சந்தித்து வந்தே பாரத் ரயில் புதுவைக்கு அளிக்க வேண்டும் என  கோரினோம். ஆனால் ஒன்றிய அரசு  வந்தே பாரத் ரயில் புதுவைக்கு வழங்கவில்லை. பிரதமர் காணொலி  மூலம் கலந்து கொண்ட ரயில்வே விழா வில் முதலமைச்சர் பங்கேற்காதது ஏன்?  ஆளுநருக்கும், முதலமைச்சருக் கும் கருத்து வேறுபாடு உள்ளதாக கூறப்படுகிறது. ஏன் பிரதமர் விழாவை புறக்கணித்தார் என முதலமைச்சர் விளக்க வேண்டும். சிறுமி படுகொலை வழக்கில் முறை யான விசாரணையை அரசு நடத்த வில்லை. கஞ்சா எங்கிருந்து வருகிறது? யார் மூலம் வருகிறது? என்பது குறித்து  விரிவான விசாரணை நடத்த வேண்டும்.  கஞ்சா விவகாரத்தில் பல மாநிலங்க ளுக்கு தொடர்பு உள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.  பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் சுயேச்சை எம்எல்ஏ சிவசங்கரன், மக்களவைத் தேர்தலில் போட்டியிட பண பேரம் நடப்பதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.  மக்களவைத் வேட்பாளர் சீட்டை ரூ.50 கோடிக்கு பேரம் பேசி விற்க  பாஜக முயற்சிக்கின்றனர். எம்எல்ஏ வாக போட்டியிடவும் பண பேரம் நடந்ததாக கூறப்படுகிறது. ஒரு அமைச் சர் தொடர்ந்து பல முறை வெளிநாடு களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி அவர் வெளிநாடு சென்று வருகிறார்.  இதுவரை 17 முறை சிங்கப்பூர், 13  முறை மலேசியா, 11 முறை துபாய்  சென்றுள்ளார். அவர் சென்று வருவ தில் மர்மம் உள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும். புதுவையிலிருந்து வெளிநாடுகளுக்கு இரிடியம் கடத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கிடைக்கிறது.  அதோடு பணத்தை பதுக்கவும் வெளிநாடு செல்வதாக தெரிகிறது. இது  தொடர்பான விவரங்களை சேகரித்து  வருகிறோம். விரைவில் அதை வெளி யிடுவோம். புதுவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ்  வேட்பாளரை கட்சி தலைமை விரை வில் அறிவிக்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பதிவு கட்டணத்தை  திரும்ப வழங்க வேண்டும் மாணவர் சங்க மாநாடு வலியுறுத்தல்

திருவண்ணாமலை, மார்ச் 16- திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில், இந்திய மாணவர் சங்கத்தின்  கிளை மாநாடு வெள்ளிக்கிழமை (மார்ச் 15) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  இதில்,கல்லூரியில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும், பேராசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்காலிக பேராசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் பதிவு செய்வதற்காக மாணவர்களிடம் இருந்து ரூ. 200 பெறப்பட்டது. பின் மாணவர்கள் தேர்வு கட்டணம் மற்றும்  பதிவு கட்டணத்தை ஆன்லைன் மூலம் பல்கலைக் கழகத்திற்கு கட்டியதால்,  மாணவர்களிட மிருந்து பெறப்பட்ட  ரூ.200 கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் திருப்பித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. கிளைத் தலை வராக ஆர்.விக்னேஷ், செயலாளராக  இ. சுஜய் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரியில் 100விழுக்காடு களப்பணி நிறைவு: ஆட்சியர் தகவல்

கிருஷ்ணகிரி, மார்ச்.16-  கிருஷ்ணகிரி மக்களவை தொகுதிக்குட்பட்ட, 6 சட்டசபை தொகுதிகளில்,  1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள, 5 வாக்கு சாவடிகளை ஆண், பெண், துணை வாக்குச்சாவடியாக பிரித்துள்ளோம். பழுதடைந்த, இடிக்கப் பட்ட கட்டடங்களுக்கு மாற்றாக புதிய கட்டடங்களுக்கு, 48 வாக்குச்சாவடி கட்டடங்கள் மாற்றப்பட்டுள்ளது. கிருஷ்ண கிரி தொகுதியில், 1,883 வாக்குச்சாவடிகள் உள்ளது. தற்போது மேலும் கூடுதலாக, 5 துணை வாக்குச்சாவடி கள் சேர்க்கப்பட்டு 1,888 உள்ளது.வாக்குச்சாவடி வாக்காளர் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் 100 விழுக்காடு களப்பணி நிறைவடைந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கடலூரில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது

கடலூர், மார்ச் 16- மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தின் விளைவாக சுத்துக் குளத் தில் சாலை அமைக்கும் பணியை வெள்ளியன்று மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார். கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 44 வது வார்டில் சுத்துக்குளம் சாலை சேதம்  அடைந்து குண்டும் குழியு மாக இருந்து வந்தது. இந்த சாலையை சீரமைக்க  வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 8 முறை பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சாலையை சீரமைக்கும் பணிக்கு ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, தார் சாலை அமைக்கப்படும் பணி தொடங்கியுள்ளது.  மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி  பணிகளை தொடங்கி  வைத்தார். மாநகராட்சி ஆணையர் காந்திராஜ், மாநகர திமுக செயலாளர்  ராஜா ஆகியோர் முன்னிலை  வகித்தனர். மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.