கல்வி வளாக ஜனநாயகத்திற்காக போராடியதால் படுகொலை செய்யப்பட்ட இந்திய மாணவர் சங்க தியாகிகள் சோமு - செம்பு ஆகியோரின் 42வது நினைவு தினம் வெள்ளியன்று (மார்ச் 31) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மாநிலக் கல்லூரியில் மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.மிருதுளாவும், பச்சையப்பன் கல்லூரியில் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் வே.அருண்குமாரும் பேசினர்.