districts

சென்னையில் குட்கா வியாபாரிகள் 42 பேர் கைது

சென்னை,ஜூலை 31-

      தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை என்ற பெயரில் சென்னையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 23-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலான ஒரு வாரக்கால கண்காணிப்பில் குட்கா கடத்தியது மற்றும் பதுக்கி விற்பனை செய்தது தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 42 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 105.3 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்த லில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக் கள் நீதிமன்றம் மூலம் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் எச்ச ரித்துள்ளார்.