திருவள்ளூர், ஜூன் 9-
செவ்வாப்பேட்டை அடுத்த தொழுவூர் கிரா மத்தை சேர்ந்தவர் அகிலன், விவசாயி.
இவர் கடந்த 7-ந் தேதி வெளியே சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் அகிலனின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 40 சவரன் தங்கம், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.5 லட்சத்து 61 ஆயிரம் ரொக்கம் ஆகிய வற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து செவ்வாப் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. விசார ணையில் கொள்ளை யடித்தது ஏற்கெனவே குற்றச் செயலில் ஈடுபட்ட ஆவடி பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்கிற சஞ்சய் (18), பட்டாளம் பகுதி யைச் சேர்ந்த லாசர், வில்லி வாக்கத்தை சேர்ந்த ராதா கிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.