districts

img

விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் பலி

மதுராந்தகம், செப். 9- காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூ்ரிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றிக் கொண்டு  வேன் ஒன்று வெள்ளிக் கிழமை இரவு மதுராந்த கம் நோக்கிச் வந்துக் கொண்டிருந்தது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ் சாலை மதுராந்தகம் அருகே  மதுராந்தகத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கார், மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரை ஓட்டி வந்த மதுராந்தகத்தை சேர்ந்த புருஷோத்தமன் மற்றும் காரில் பயணம் செய்த சக்திவேல், அணைக்கட்டு கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலி யானார்கள். விபத்தில் படு காயமடைந்த வெங்கடே சன், பூவரசன் ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியி லேயே பூவரசன் பரிதாப மாக இறந்தார். வேனை  ஓட்டி வந்த பார்த்திபன் உள்ளிட்ட 6 பேர் சிகிச்சைக் காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் காவல் துறையினர் இறந்த வர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.