வேலூர், நவ.1- வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றத்தின் 35 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது . விழாவிற்கு தமிழியக்க தலைவரும், விஐடி பல்கலைக்கழக வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசு கையில்,“பாரதிதாசனை போல இன்னொரு கவிஞரை பார்க்க முடியாது.” என்றார். பெண்ணுரிமை பற்றி அதிகம் எழுதி யுள்ளார். உலகத்தில் உள்ள பழமை யான மொழிகளில் இந்தியாவில் தமிழும்,சமஸ்கிருதமும் உள்ளது. சமஸ்கிருதம் வழக்கொழிந்து போனது. ஆனால் இன்றும் பழமை மாறாமல் இருக்கும் ஒரே மொழி தமிழ் மொழி தான் என்றும் அவர் கூறினார். திராவிட இயக்க தமிழர் பேரவை நிறு வனர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில், “எழுத்தும், பேச்சும் இந்த உலகில் என்ன செய்திருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். எழுத்தும் பேச்சும் புரட்சியை கொண்டு வந்துள்ளது. ஒரு நாட்டுக்கு விடுதலையை ஏற்படுத்தி தந்துள்ளது. தன்னுடைய இறப்பிற்கு முன்பு பகத்சிங் எழுதிய கடிதம் நாட்டை உலுக்கியது. எழுத்தும் பேச்சும் தான் நம்மை மனிதர்கள் அடையாளப்படுத்தியது. எழுத்தும், பேச்சும் தான் நமக்கு உணரக்கூடியது, உயிர் ஊட்டியது”என்றார். முன்னதாக பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றத்தின் புத்தகத்தை வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட சுப. வீர பாண்டியன் பெற்றுக் கொண்டார். விழா வில் இலக்கிய மன்ற நிர்வாகிகளுக்கு அடை யாள அட்டை வழங்கப்பட்டது. விஐடி துணைத் தலைவர் சங்கர் விஸ்வ நாதன், துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் ஆகியோர் பேசினர். இந்நிகழ்வில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்ற ஆசிரிய பொறுப்பாளர் வினோத் பாபு வரவேற்றார். முடிவில் மன்ற ஆசிரிய பொறுப்பாளர் மரிய செபஸ்தியான் நன்றி கூறினார்.