சென்னை,ஆக.9-
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. சீட்பெல்ட் அணியாதவர்கள், ஹெல்மெட் அணியாதவர்கள் என பல்வேறு விதி மீறல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று வாகன விதிமீறலில் ஈடுபடுபவர்கள் 3 முறை விதிமீறல் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களது லைசென்ஸ் ரத்து செய்யவும் போலீசார் பரிந்துரை செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு 6 மாதத்தில் ஜூன் மாதம் வரையில் விதி மீறல்களில் ஈடுபட்ட 30 ஆயிரத்து 383 பேரின் லைசென்சை காவல்துறையினர் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். அதிவேகமாக சென்ற 7 ஆயிரத்து 57 பேர் சிக்கி யுள்ளனர். வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்திய தாக 6 ஆயிரத்து 748 வழக்குகளும், போடப்பட்டுள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டிய 2 ஆயிரத்து 272 பேர் சிக்கியுள்ளனர். சிக்னலை மதிக்காமல் சென்ற குற்றத்துக் காக 8 ஆயிரத்து 300 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.