districts

ஹுக்கா பார் நடத்தினால் 3 ஆண்டுகள் சிறை!

சென்னை, அக். 19- சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் விளம்பரம் செய்தலை தடை  செய்தல், முறைப்படுத்துதல் சட்ட மசோதாவை மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தாக்கல் செய்தார். சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலை தடை செய்தல் மற்றும் வணிகம், வாணிபம், உற்பத்தி, வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டம் 2003-ஐ, தமிழ்நாட்டிற்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த திருத்தம் மூலம் புகைப்பிடித்தல் மேலும் ஒழுங்கு படுத்தப்படுகிறது. சென்னையில் புகைக்குழல் கூடங்கள் (ஹுக்கா பார்) அதிக அளவில் திடீரென பெருகி உடல் நலனுக்கு கொடிய சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பல உணவகங்களும், புகைப்பிடிக்கும் பகுதிகளில் இந்த சேவையை வழங்கி, புகைப்பிடிப்பதை அனுமதித்து வருகின்றன. தற்போது தமிழ்நாட்டில் புகைக்குழல் கூடத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் எதுவும் இல்லை. எனவே சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலை தடை செய்தல் மற்றும் வணிகம்,  வாணிபம், உற்பத்தி, வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டம் 2003-ஐ திருத்தி, புகைக்குழல் கூடத்தை தடை செய்யவும், அதை மீறுப வர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் வரை  அபராதம் விதித்து தண்டனை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரியில் உள்ளாட்சி அமைப்பு களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் தூத்துக்குடி மாவட்டம் பேரூராட்சி தேர்தல்  ரத்து செய்யப்பட்டது. இதன் தனி அலுவலர்  பதவி காலத்தை வருகிற டிசம்பர் 31வரை நீடித்தும் மசோதா நிறைவேற்றப்பட்டது.