சென்னை, ஆக.6–
மத்திய தொழில் பாதுகாப்பு படை, எக்ஸ்னோரா ஆகிய வற்றுடன் இணைந்து சிமாட்ஸ் பல்கலைக் கழகத்தின் என்எஸ்எஸ் மற்றும் பசுமை மன்ற மாணவர்கள் சுமார் 3ஆயிரம் மரக்கன்றுகளை தங்களது கல்லூரி வளாகத்தில் நட்டனர்.
பசுமை வளாக இயக்கத்தின் ஒருபகுதியாக நடத்தப் பட்ட இந்த இயக்கத்தில் சிமாட்ஸ் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பல்கலைக்கழக வளாகத்தை மிகவும் பசுமையானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் மாற்றும் வகையிலும், பசுமையான சூழலை வளர்க்கும் விதமாகவும் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஆய்வாளர் சரவணன், துணை ஆய்வாளர் கே.வி.கே.ஸ்ரீராம், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் தலைவர் செந்தூர்பாரி, கிரீன்கலாம் நிறுவனர் மறைந்த நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி விவேக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்தநிகழ்ச்சிக்கு சிமாட்ஸ் பல்கலைக் கழகவேந்தர் என்.எம்.வீரையன் தலைமை தாங்கினார்