கடலூர்,ஜன.9- கடலூரில் நடைபெற்று வரும் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில் 3 மாநில இளம் பெண்கள் கலந்து கொண்டனர். அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்கள் சேர்ப்பு முகாம் கடலூர் அண்ணா விளை யாட்டரங்கில் கடந்த 4 ஆம் தேதி முதல் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஏப்ரலில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடலூர் அண்ணா விளை யாட்டரங்கில் உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. ஆட்சேர்ப்பு முகாம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி காலை 7 மணி வரை நடைபெறுகிறது. கடந்த 4 ஆம் தேதி முதல் நடைபெற்ற முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பெண் களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இளம் பெண்கள் கலந்து கொண்ட னர். இவர்களுக்கு தேர்வு நுழைவுச்சீட்டு, கல்விச் சான்றிதழ்கள், காவல் துறை நடத்தை சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உட்பட 18 வகையான சான்றி தழ்கள் சரிபார்க்கப்பட்டது. அதன் பின்னர் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக, கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், உடல் தகுதி தேர்வு மட்டும் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரை சாலையில் நடத்தப்பட்டது.