districts

img

பள்ளத்தில் விழுந்த கார் 3 பேர் பலி

 செங்கல்பட்டு, ஆக.16-

     மதுராந்தகம் அருகே சாலை ஓர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததால் ஏற்பட்ட சாலை விபத்தில் மூன்று பேர் உடல் நசுங்கி பலியாகி னர்.

      மதுராந்தகம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அய்ய னார் கோவில் என்ற இடத்தில் திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில்  என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 20 அடி ஆழ பள்ளத்தில்  கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.

     இதில் காரில்  பயணம் செய்த மூன்று ஆண்களும் சம்பவ இடத்தி லேயே பலியாகினர். இதனை அடுத்து தகவல்  அறிந்து அங்கு வந்த  மதுராந்தகம் காவல்துறை யினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர் மேலும் விசாரணை யில் கதிரவன் (வயது50), கார்த்திக்(32), நந்தகுமார் (42) ஆகிய மூவர் எனவும்  இதில் கார்த்திக் சென்னை யில் உள்ள ஐடி நிறுவனம்  ஒன்றில் வேலைக்கு சேர்வ தற்காக உறவினர்களுடன் சென்ற போது இந்த கோர விபத்து நடைபெற்றுள்ள தாக முதல் கட்ட விசாரணை யில் தெரிய வருகிறது. இந்த  விபத்து குறித்து மதுராந்தகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.