கிருஷ்ணகிரி,ஆக.9-
கெலமங்கலம் அருகே பட்டாசு ஆலை யில் ஆய்வுக்காக சென்ற போது நடந்த வெடி விபத்தில் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை வட்டம், கெல மங்கலம் அருகே உள்ள ஜெ.காரப் பள்ளி ஊராட்சிக்குட்பட்ட வெங்கடாபுரம் கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வரு கிறது.
இதை கேரள மாநிலத்தைச் சேர்ந்த சாபு புருஷோத்தமன், சஞ்சு ஆகியோர் நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் 29 ஆம் தேதி கிருஷ்ணகிரி பழைய பேட்டை பட்டாசு குடோனில் நடந்த விபத்தில் 9 பேர் பலியானாகினர். 15 பேர் படுகாயமடைந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பட்டாசு குடோன்கள் மற்றும் கடைகளை ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்காக சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், ஓசூர் நிலவரி திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி தலைமையில் தனி வட்டாட்சியர் முத்து பாண்டி தேன்கனிக்கோட்டை கோட்டாட்சி யர் சரவணமூர்த்தி உள்ளிட்டோர் வெங்கடா புரத்தில் உள்ள பட்டாசு ஆலையை ஆய்வு செய்வதற்காக சென்றனர்.
அப்போது ஆலையில் இருந்த பட்டாசு கள், வெடி மருந்து பெட்டிகள் கீழே தவறி விழுந்தது. இதில் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் மாவட்ட வருவாய் தனி அலுவலர் பாலாஜி, தாசில்தார் முத்துபாண்டி, பட்டாசு குடோன் மேலாளர் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மூக்கம்பட்டி ஸ்ரீமந்த் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்சில் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஓசூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கெலமங்கலம் துறையினர் மாவட்ட ஆட்சியர் சரயு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த னர். படுகாயம் அடைந்தவர்களை பார்வை யிட்டு உடன் சிகிச்சை அளிக்க உத்தர விட்டார்.
இதில் ஸ்ரீமந்திற்கு 90 விழுக்காடு வரையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி மேல் சிகிச்சைக்காக பெங்களூரு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதிகாரி முத்துபாண்டி ஓசூரில் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டாசு ஆலை விபத்துக்கான காரணம் குறித்து கெலமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.