கிருஷ்ணகிரி,ஆக.9-
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகில் சவுளுரைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி கார்த்தி. 27 வயதாகும் இவர், ஓராண்டுக்கு முன்பு தனது உறவினரிடம் இருசக்கர வாகனத்தை 15,000 ரூபாய்க்கு பூ மாலை நகரை சேர்ந்த விஜயகுமாரிடம் அடமானம் வைத்துள்ளார்.
இந்த கடன் தொகையை கட்ட முடியாததால் விஜயகுமார் அவரது குடும்பத்தினர் தகாத வார்த்தை களால் திட்டியும் மிரட்டியுள்ளனர். இந்நிலையில் கார்த்திக் குடும்பத்தினர் சில நாட்கள் முன்பு ரூ.10,000 கொடுத்து மீதி பணத்தை சில மாதங்களில் பிறகு தருவதாகவும் கூறியுள்ளனர். அதற்குப் பிறகு, விஜய குமார் குடும்பத்தினர் மிரட்டியதால் மனமுடைந்த கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து மிரட்டல் விடுத்து கொண்டிருந்த விஜய குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கார்த்திக் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கார்த்திக் பெற்றோர் மற்றும் உற வினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டிய தாக வழக்குப்பதிவு செய்து விஜயகுமார், அவரது தந்தை ராமசாமி, அண்ணன் சிவக்குமார் ஆகிய மூவரை யும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.