districts

img

அரக்கோணம் தொகுதியில் 29 வேட்பு மனுக்கள் தள்ளுபடி

அரக்கோணம் தொகுதியில்  29 வேட்பு மனுக்கள் தள்ளுபடி  ராணிப்பேட்டை, மார்ச் 28 -  அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் 44 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று (மார். 28) இந்த மனுக்களை அனைத்து வேட்பாளர்கள் முன்னிலை யில் தேர்தல் பொது பார்வையாளர் சுனில் குமார்,   தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டார். மொத்தம் 44 வேட்பு மனுக்களில் 10 மனுக்கள் இரு முறை சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களாக இருந்த காரணத்தி னால் முதல் மனுவுடன் இணைக்கப்பட்டது.  5 வேட்பு மனுக்கள் உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத காரணத்தி னாலும், முன்மொழிபவர்கள் வேட்புமனுக்களில் கையொப்பமிடாத காரணத்தினாலும் தள்ளுபடி செய்யப்பட்டது.  அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 29 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற வரும் 30ஆம் தேதி  கடைசிநாள்  என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ச. வளர்மதி தெரிவித்துள்ளார். அன்று பிற்பகல் 3 மணியள வில் ஏற்கப்பட்ட வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

;