இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேளச்சேரி பகுதி குழு சார்பில் 28 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமையன்று (ஜன.27) தரமணியில் நடைபெற்றது. பகுதி தலைவர் கோபி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வெற்றி பெற்ற 150 குழந்தைகளுக்கு சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் ஆர்.வேல்முருகன், தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், செயலாளர் தீ.சந்துரு, பொருளாளர் திவாகர், பகுதிச் செயலாளர் சூர்யா உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி பேசினர்.