districts

img

25 விழுக்காடு உள் ஒதுக்கீடு வேண்டும்: திருக்கோயில் தொழிலாளர்கள் கோரிக்கை

சென்னை, ஏப். 30 - செயல் அலுவலர் 4 நிலை பணி நியமனம் செய்யும் போது, ஏற்கனவே பணி யாற்றும் ஊழியர்களுக்கு 25 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திருக்கோயில் தொழிலாளர் யூனியன் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தொழிலாளர்கள் யூனியனின், சென்னை கோட்ட கூட்டம் நுங்கம் பாக்கத்தில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில், கோயில்களில் தொகுப்பு ஊதியம், தினக்கூலியாக தொடர்ந்து 3 ஆண்டுகள் பணி புரிவோரை நிரந்தரம் செய்ய வேண்டும். அன்னதான பணியாளர்களை அரசாணைப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களைப் போன்று கோயில் பணியாளர்களுக்கும் விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். துறை ரீதியிலான ஓய்வூதியத்தை ரூ5 ஆயிரம் உயர்த்த வேண்டும். கோயிலுக்கு அருகி லேயே பணியாளர் குடியிருப்பு கட்டி தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்திற்கு, சென்னை கோட்டத்தின் தலைவர் எஸ்.தனசேகர் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் முத்துசாமி,  கோட்ட செய லாளர் ரமேஷ், கோட்ட கவுரவத் தலைவர் வேலாயுதம், பொருளாளர் குகன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.