ஐசிஎப் தனியார்மயத்தை கைவிட்டு, 2300 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று (ஜன.29) ஐசிஎப் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் இந்த போராட்டத்தை நடத்தியது. சி.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் டிஆர்இயு செயல் தலைவர் ஏ.ஜானகிராமன், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை, சங்க நிர்வாகிகள் பா.ராஜாராமன், ஜே. கதிரவன், ராஜேந்திர பாபு, ஜி.நடராஜன் உள்ளிட்டோர் பேசினர்.