districts

சென்னை முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டில் 5 பேர் உள்பட  21 பேருக்கு புதிதாக கொரோனா

டெல்லி, நவ. 19 இந்தியாவில் புதிதாக 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று வெள்ளியன்று 18 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,01,575 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 185 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 5 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், 9 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் எந்த மாநிலத்திலும் யாரும் உயிரிழக்காத நிலையில், இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,33,295 ஆக தொடருகிறது. சனிக்கிழமையன்று மட்டும் 11 பேர் வீடு திரும்பிய நிலையில், இதுவரை மொத்தம் 4,44,68,095 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விழுக்காடு 98.81 சதவீதமாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.68 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று இந்திய குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீண்டும் தொடங்கியது ஊட்டி மலை ரயில் சேவை

 ஊட்டி, நவ. 19 கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன.ரயில் பாதையை சீர மைக்கும் பணி முடி வடைந்த தையடுத்து மேட்டுப்பாளை யம் - ஊட்டி, ஊட்டி - மேட்டுப் பாளையம்  இடையே மலை ரயில் சேவை 10 நாட்க ளுக்கு பின்னர் ஞாயிறன்று (நவ.19) மீண்டும் தொடங்கி யது.

ஆசியாவிலேயே சிறந்த சுற்றுலாத்தலமாக கொச்சி

கொச்சி, நவ.19- உலகப் புகழ்பெற்ற பயண இணையதளமான கோண்டே நாஸ்ட், அடுத்த ஆண்டு ஆசியாவிலேயே சிறந்த சுற்றுலாத்தலமாக கொச்சியை பட்டியலிட்டுள்ளது. கொச்சியின் நிலையான வளர்ச்சி முயற்சிகள், பரபரப்பான நீர் போக்குவரத்து மற்றும் திருவிழாக்கள் ஆகியவை அதன் முக்கிய இடங்களாக சிறப்பிக்கப்படுகின்றன. கொச்சியின் நீர் போக்குவரத்து பல நூற்றாண்டுகளாக சுற்றுலாப் பயணி களை கவர்ந்து வருவதாக அந்த இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது. 14 ஆம் நூற்றாண்டு முதல் அரேபிய, சீன மற்றும் ஐரோப்பிய பயணிகள் கொச்சியின் நீர் போக்குவரத்தைக் கண்டு வியந்துள்ளனர். பத்து தீவு களை இணைக்கும் 78 கி.மீ தண்ணீர் மெட்ரோ புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வரப்போகிறது. இது 2024 ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் சூரிய சக்தியில் இயங்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. இது தவிர, உலகின் முதல் முழு சூரிய சக்தியில் இயங்கும் விமான நிலையம் கொச்சியில் உள்ளது. கோண்டே நாஸ்ட் கட்டுரையில், நாட்டின் மிகப்பெரிய வணிக ஜெட் முனையமும் இங்கு அமைந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. கேரள சுற்றுலாத் துறை அடுத்த ஆண்டில் ஒரு பெரிய  உள்கட்ட மைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை நிறை வேற்ற உள்ளது. மூணாறில் இருந்து கோழிக்கோடு, திருச்சூர் பூரம் முதல் கொச்சி முசிரிஸ் பைனாலே வரை யிலான சுற்றுலா வழித்தடம் சிறப்பாக அமைய உள்ளது. சீன வலையில் மீன்பிடிப்பது, சதுப்புநிலங்கள் வழி யாக படகு சவாரி செய்வது, பாரதப் புழா வழியாக பயணம் செய்வது சுற்றுலா பயணிகளை கவரும். போகலி பாடம், பாலக்காடு கணவாய், பொன்னானி அங்காடி ஆகியவை சிறப்பான இடம் பிடிக்கும் என கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ.முஹம்மது ரியாஸ்  கூறுகையில், நிலையான இலக்குகள் மற்றும் பொறுப்பான சுற்றுலாத் தலங்களை அடைவதில் உள்ள விடா முயற்சி, கலாச்சார விழாக்களின் சுற்று லாத் திறனைக் கண்டறிதல் மற்றும்  பொதுமக்களின் பங்கேற்பு ஆகிய வற்றால் இந்தச் சாதனையை அடைய முடிந்துள்ளது. டைம் இதழின் 2022 ஆம் ஆண்டின் சிறந்த இடங்கள் பட்டி யலிலும், நியூயார்க் டைம்ஸின் முதல் 52 இடங்கள் பட்டியலிலும் கேரளம் இடம்பெற்றுள்ளது. சுற்றுலாத் துறை மற்றும் சுற்றுலாத் துறை நிறுவனங் களின் பயணம் சரியான திசையில் உள் ளது என்பதற்கு இதுவும் சான்றாகும் என்று அமைச்சர் கூறினார்.

திருவள்ளூர் அருகே ரயில் மோதி 3 பேர் பலி
திருவள்ளூர், நவ. 19- திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ஒரு பெண் உட்பட 3 பேர் மின்சார ரயில் மோதி உயிரிழந்தனர். சென்னையிலிருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி, பட்டாபிராம் மார்க்கமாக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு ரயில் நிலை யங்களில் லிப்ட் வசதியோ, நகரும் படி கட்டுகளோ இருப்பதில்லை. எனவே மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் தண்டவாளத்தை கடந்து ரயில் நிலையத்தை விட்டு வெளியேற முயற்சி செய்கிறார்கள். ஆனால் இது சில நேரங்களில் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது. திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரு பெண் உட்பட மூன்று பேர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வரு கின்றனர்.

கற்றல் கற்பித்தல் பணி மேம்பட உயர்தொழில்நுட்ப ஆய்வகம் மாவட்ட நிர்வாகத்திடம் ஆசிரியர்கள் கோரிக்கை

திருவள்ளூர், நவ.19- மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணி மேம்பட உயர்தொழில் நுட்ப ஆய்வகம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர்கள் கழகம் நவ 18 அன்று திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.ஜம்பு தலைமை தாங்கினார். ஜாக்டோ -ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் மாநில பொது செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர்  கோரிக்கை விளக்கி பேசினர். 45 ஆண்டுகளாக அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு  வழங்கவேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்து,  பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், அரசு கடந்த 14- உதவி பெறும் அரசு பள்ளிகளில் பயிலும் ஆங்கில பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும் வழங்க வேண்டும், மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணி மேம்பட உயர்தொழில் நுட்ப ஆய்வகம் உருவாக்க வேண்டும், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தினர்.

வாடிக்கையாளர்களின்  தகவல்களை விற்றவர் கைது

அம்பத்தூர், நவ. 19- அம்பத்தூர் அருகே பணி செய்யும் நிறுவனத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் தகவல் மற்றும் ஆவணங்களை திருடி, வேறு நிறுவனத்திற்கு விற்று பல லட்சங்கள் தரகு தொகை பெற்ற பெண் ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவலிக்கா (32). இவர் அம்பத்தூர் அருகே கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் டெலிகாலிங் வேலைக்கு கொரட்டூர், துரைசாமி ரெட்டி தெருவைச் சேர்ந்த குணசுந்தரி (49) என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்துள்ளார். இவர் நிறுவனத்தின் பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களின் தகவல்களை பராமரித்தல், நிறுவனத்தில் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளருக்கு வங்கி மூலம் கடன் ஏற்பாடு செய்து தரும் பணியையும் செய்து வந்துள்ளார். இவர் கடந்த 5 ஆண்டுகளில் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கடன் வாங்கித் தரும் நிறுவனத்திடம், இவரது நிறுவனத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் தகவல்கள் மற்றும் ஆவணங்களை கொடுத்து கடன் தொகைக்கு ஏற்றவாறு, பல லட்சங்கள் கமிஷன்‌ தொகையை குணசுந்தரி பெற்றுள்ளார். இதை அறிந்த நிறுவனத்தின் உரிமையாளர் பிரவலிக்கா ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இணைய வழி குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குணசுந்தரி தனது நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி விற்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் தலைமறைவாக இருந்த குணசுந்தரியை கைது செய்தனர்.

சுய உதவிக்குழு  உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி

ராணிப்பேட்டை, நவ. 19 - தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. அழகு சாதனங்கள், பொம்மை வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கைத்தறி சேலை வகைகள், தானிய உணவு வகைகள், ஊறுகாய் வகை கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அணிகலன்கள் மற்றும் அனைத்து வகையான தினசரி பயன்பாட்டு பொருட்களை மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் காட்சிப்படுத்தி, அதனை கட்டாய கண்காட்சி மூலம் பொது மக்களுக்கு சரியான விலையில் இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் நவ.21 முதல் 30 வரை 10 நாட்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட கர்நாடக பிராந்தி பறிமுதல்

சத்தியமங்கலம், நவ.19- தமிழ்நாடு கர்நாடக எல்லையில் ஈரோடு மாவட்டம் காரப்பள்ளம்பள்ளம் சோதனை சாவடியில் கர்நாடகவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த வாகனங்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது சத்தியை நோக்கி வந்த ஒரு வாகனத்தில் கர்நாடகா பிராந்தி 180 எம்எல் அடங்கிய, 3 அட்டை பெட்டிகள் கொண்ட  144 பாக்கெட்டுகள் ஓட்டுநர் சீட்டின் கீழே மறைத்து கடத்தி வந்ததை போலீசார் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.