districts

img

ஆறுமுகநாவலர் 201-வது பிறந்த நாள் விழா

சிதம்பரம், ஆக. 17-

     சிதம்பரம் ஆறுமுகநாவலர் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர் ஆறுமுக நாவலர் 201 ஆவது பிறந்தநாள் விழா பள்ளியின் மைதானத்தில் நடைபெற்றது.  இதில் பள்ளிக்குழு தலைவர் சேது சுப்பிர மணியன் தலைமை தாங்கினார். பள்ளி குழுவின் செயலாளர் அருள்மொழி செல்வன் வரவேற்றார்.  

    தமிழ்நாடு ஆசிரியர் கல்விக் கழக மேனாள் துணைவேந்தர் பஞ்சநாதம் கலந்து கொண்டு மாணவர்கள் நற்பண்புகளை வளர்த்துக் கொண்டு கல்வி கற்று நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் எனப் பேசினார்.   

    இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பிரமிட் போன்ற சாகச நிகழ்ச்சிகளும், கூட்டு உடற்பயிற்சி, சிலம்ப விளையாட்டு, நடனம் மற்றும் மூங்கில் நடனம்  உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  பிறகு, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்று, பதக்கங்கள் வழங்கப்பட்டன.