செங்கல்பட்டு, ஜன.5- செங்கல்பட்டு நகராட்சி அனுமந்த புத்தேரியில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் வெள்ளியன்று (ஜன.5) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இம்மையம் செங்கல்பட்டு நகராட்சி யில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் (2021-22) திட்டத்தின் கீழ் அனுமந்தப்புத்தேரியில் 4500 சதுர அடி அளவு கொண்ட கட்டடமாகும். 2340 எண்ணிக்கையிலான புத்த கங்கள், கணினி வசதி போதிய அளவு இருக்கை வசதி சுமார் 40 எண்ணிக்கையிலான நபர்கள் அமர்ந்து படிக்கும் வசதிஇ 10 எண்ணிக்கை யிலான கணினி வைபை வசதியுடன் பொருத்துப்பட்டு குழந்தைகள் விளை யாடுவதற்கென தனியாக 30 இருக்கை வசதிகளுடன் கூடிய இருபால ருக்கும் தனித்தனியான கழிப்பறை வசதி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி பொருத்தப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், சார் ஆட்சியர் நாராயண சர்மா, பயிற்சி ஆட்சியர் ஆனந்த்குமார் சிங் செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், செங்கல்பட்டு நகரமன்ற துணைத்தலைவர் அன்பு செல்வன், செங்கல்பட்டு நகராட்சி ஆணையாளர், நகரமன்ற உறுப்பினர் கள் மற்றும் பொதுமக்கள் ஆகி யோர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் போட்டி தேர்வாளர்களுக்காக ரூ 2.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறிவு சார் மையம் காணொலி மூலம் முதல்வரால் திறக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் அமைக்கப் பட்டுள்ள இந்த நூலகத்தில் விசாலமான படிப்பறை, தொடு திரையுடன் கூடிய அரங்கங்கள், இலவச இணைய வழி மூலம் கல்வி கற்க 50க்கு மேற்பட்ட கணினி கள், பெண்கள் குழந்தைகள் எனக் கற்கத் தனி அறைகள், மற்றும் சுகாதாரமான குடிநீர் நவீன கழிவறை என அனைத்து வசதிகளும் அமைந்துள்ளது. இதன் மூலம் அனைத்து வகையான புத்தகங்களும் போட்டி தேர்வுகளில் வினாத்தாள் தொகுப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.