districts

சென்னை முக்கிய செய்திகள்

காலமானார்

 சென்னை, ஜன. 22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சைதாப்பேட்டை  பகுதிக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு சிறுபான்மை  மக்கள் நலக்குழுவின் மாநில பொருளாளருமானஒய். இஸ்மாயிலின் தந்தை எம். முகமது யூசுப் திங்களன்று  (ஜன.22) காலமானார். அவருக்கு வயது73.அன்னாரது  உடல் சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கட்சியின் மாநில செயற்குழு  உறுப்பினர்கே. கனகராஜ், தென்சென்னை மாவட்டச்செயலா ளர் ஆர். வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் வே. ராஜ சேகரன், நலக்குழுவின் மாநில பொதுச் செயலாளர் எம். ராம கிருஷ்ணன் சைதை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேஷ், உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனை  தொடர்ந்து அவரது இறுதி நிகழ்ச்சி சைதாப்பேட்டை அடக்கஸ்தலத்தில் நடைபெற்றது.

கிளாம்பாக்கத்தில்  ரூ.20 கோடியில் ரயில் நிலையம்

சென்னை, ஜன.22- வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-  கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலைய கட்டுமான பணிகளை வருகிற ஆகஸ்டு மாதத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம். ரயில் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த ரயில் நிலையம் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில், 3நடைமேடைகளுடன் அமைய உள்ளது. 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும். கிளாம்பாக்கத்தில்இருந்து தாம்பரம் ரயில் நிலையம் சில கிலோ மீட்டர் தொலை விலேயே இருப்பதால் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நிற்கும் வகையில் நீண்ட நடைமேடை அமைக்கவேண்டிய அவசியமில்லை. இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தி முடிவு செய்யப்படும்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டத்தில்   21.23 லட்சம் வாக்காளர்கள் 

கடலூர்,ஜன 22-  கடலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் திங்களன்று (ஜன.22) வெளியிட்டார். இதில் 21,23,276 வாக்காளர்கள் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதி தொகுதிகளிலும் 48,440 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டும், இறப்பு, இடம்பெயர்வு, இரட்டை பதிவு  உள்ளிட்ட காரணங்களால் 16,458 வாக்கா ளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். 17,986  வாக்காளர்கள்  திருத்தம் செய்யப்படும்  பணி மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலின் படி மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் (தனி), ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 10,45,551  ஆண் வாக்காளர்கள், 10,77,438 பெண் வாக்காளர்கள், இதர் 287 என மொத்தம் 21,23,276 வாக்காளர்கள் உள்ளனர். 2023 ஆம் ஆண்டை விட 31,982 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். குறைந்தபட்சமாக நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் 2,01,309 வாக்கா ளர்களும் அதிகபட்சமாக விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் 2,51,762 வாக்கா ளர்களும் உள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாகவும், மேலும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினத்தன்று 18 வயதிலிருந்து 19 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்  அருண் தம்புராஜ் தெரிவித்தார்.  இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்  கோ.மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் குளோப், மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

27 ஆயிரம் அரசு பள்ளிகளை நவீனமாக்க திட்டம்

சென்னை, ஜன. 22- தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல் முறையை கொண்டு வருவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளிகளில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வரும் நிலையில் வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மேலும் பல வசதிகளை செய்து கொடுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரம் அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிலும் ஹைடெக் லேப்  அமைப்பதற்கான ஒப்பந்தம் கோரப்பட் டுள்ளது. இந்த பரிசோதனைக் கூடத்தை பராமரிக்க கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவரும் நியமிக்கப்படுகிறார். இன்டர்நெட் வசதி யுடன் இந்த ஹைடெக் லேப் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு ஹைடெக் லேப் அமைக்க  ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விரைவில் இந்த பணி தொடங்கப்பட உள்ளது. அதேபோல் 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க வும் திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்வி ஆற்றலை பெருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பு அமைய உள்ளது. திரை மற்றும் புரஜெக்டருடன் கம்ப்யூட்டர் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு எளிதான முறையில் பாடங்களை கற்பிக்க முடியும். இது தவிர தொடக்க மற்றும் நடுநிலைப்  பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு  கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கும்  திட்டமும் ஜூன் மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் திறனை வளர்க்க முடியும். ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள திரையின் மூலம் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளலாம். அதனடிப்படையில் தொடக்கக் கல்வித் துறையில் இந்த புதிய திட்டங்களை வரும் கல்வியாண்டில் செயல்படுத்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது: தொடக்கக் கல்வித் துறையின் தரத்தை  உயர்த்தும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. மாணவர்களின் இடை நிற்றல் தவிர்க்கப்படுவதோடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்  என்று எதிர்பார்க்கிறோம். எண்ணறிவும் எழுத்தறிவும் வளர்ச்சி அடைவதோடு மாணவர்களின் கல்வித் திறனும் உயரும். வரும் கல்வியாண்டில் இந்த புதிய திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.