அம்பத்தூர், டிச. 10- அம்பத்தூர் தொழிற் பேட்டை அருகே முகப்பேர் மேற்கு பகுதியில் தனியார் நிறுவன கிடங்கில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த 2 ஊழியர்களை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர். அம்பத்தூர் தொழிற் பேட்டை அருகே உள்ள முகப்பேர் மேற்கு பகுதி யில் தனியார் கிடங்கில் கஞ்சா செடிகள் வளர்த்து விற்பனை செய்து வரு வதாக அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு சனிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது தனியார் கிடங்கில் சுற்றுச்சுவர் அருகே கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து, கிடங்கில் தங்கியிருந்த இருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அணில்குமார் (36), அச்செலால் யாதவ் (48) என்பதும், அவர்கள் தங்களது மாநிலத்தில் இருந்து கஞ்சா விதை களை வாங்கி வந்து தங்கியிருந்து வேலை செய்த நிறு வனத்தின் கிடங்கின் சுற்றுச்சுவர் அருகில் பயிரிட்டதும், அதை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் வசிக்கும் வட மாநில கட்டுமான தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து, அம்பத்தூர் நீதிபதி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.