திருவள்ளூர், அக் 6- கும்மிடிப்பூண்டி அருகே சின்ன புலியூர் கிராமத்தில் உயர் மின்னழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் அவ்வழியாக சென்ற இருவர் மின்சாரம் தாக்கி பலியானார்கள். கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (48), திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த ரமனய்யா (38) ஆகியோர் நிரந்தரமாக மேற்கண்ட கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சின்ன புலியூர், பெரிய புலியூர், பூவாலம் பேடு, திடீர் நகர், தாணிப்பூண்டி, ஜி.ஆர். கண்டிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூலி வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் மணலி கிராமத்தில் கூலி வேலை செய்வதற்காக மேற்கண்ட இருவரும் வெள்ளியன்று (அக் 6), இரு சக்கர வாகனத்தில் சின்ன புலியூர் எல்லை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது கீழே உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்துள்ளதை கவனிக்காமல் சென்றதால் இரு சக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை அறிந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மேற்கண்ட கிராம மக்க ளுக்கு தகவல் கூறிய பின்னர் பாதிரிவேடு காவல்துறையினருக்கு தகவல் கொடுக் கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் இருவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மாலை நேரங்களில் காற்றும் மழையும் பெய்து வருகிறது. இதில் ஆங்காங்கே மின்கம்பிகள் அறுந்து விழுவது வழக்க மாக உள்ளது. மின்கம்பிகள் அறுந்த உடன் சம்பந்தப்பட்ட மின் வாரிய கட்டுப் பாட்டுறைகளில் சிவப்பு விளக்குகள் எரியும் என கூறப்படுகிறது. எனவே அந்த அபாயத்தை உணர்ந்து மின்துறை அதி காரிகள் ஊழியர்கள் மின்சாரத்தை துண்டிக்க விரைந்து நடவடிக்கை எடுத்தால் மனிதர்கள் மற்றம் கால்நடைகள் உயிரிழப்பதை தடுக்கமுடியும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.