districts

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி, ஜூன் 17-

    அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

   கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனா சூர்கோட்டையை சேர்ந்தவர் செல்வம் (52). கிராம நிர்வாக உதவியாளராக பணி செய்கிறார்.  

    இவர் கடந்த அரசு பணிக்கு வரு வதற்கு முன்பாக சென்னையை தலை மையிடமாக கொண்ட பி.எம்.எஸ். தொண்டு நிறுவனத்தில் பணி செய்தார். அங்கு எழுத்தராக பணியாற்றிய சென்னை தண்டையார்பேட்டை சிவா (40) என்பவருடன் செல்வத்திற்கு பழக்கம் ஏற்பட்டது.  

   கடந்த மார்ச் மாதம் செல்வத்தை தொடர்பு கொண்ட சிவா, தனக்கு அரசு உயரதிகாரிகள் பலரை தெரியும். யாருக்காவது அரசு வேலை வேண்டு மென்றால், பணம் கொடுத்தால் வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார்.  

    இதனை நம்பிய செல்வம், தனது மகள், மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு ரூ.13 லட்சத்தை செல்வத்திடம் கொடுத்துள்ளார். இது தவிர உறவினர்கள் நண்பர்கள் என 71 பேரிடம் ரூ.79 லட்சத்து 54 ஆயிரத்து 600-ஐ வசூலித்து சிவாவிடம் கொடுத்துள்ளார். அப்போது சென்னை பாடியநல்லூரை சேர்ந்த ரமேஷ் (19) சிவாவுடன் இருந்து பணத்தை பெற்றுள்ளார்.  

   செல்வத்தின் மகன், மகள் உள்ளிட்ட 73 பேருக்கு அரசு வேலை வாங்கித் தராமல் சிவா காலங்கடத்தியுள்ளார். இது தொடர்பாக அவரை பலமுறை தொடர்பு கொண்ட போது, முறையாக பதில் இல்லை. இதையடுத்து, கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், அலைக்கழித்துள்ளார்.

     பின்னர், இந்த  பண மோசடி குறித்து எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்தில் செல்வம் புகார் அளித்தார். இந்த வழக்கை கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றினர்.  இதனையடுத்து சென்னை விரைந்த காவலர்கள் அங்கு சிவா, ரமேஷ் ஆகி யோரிடம் விசாரணை நடத்தினர்.

   இதில் 2 பேரும் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கியது உண்மை என்பது தெரியவந்தது. பிறகு, 2 பேரையும் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.