சென்னை, ஏப். 17- சென்னை புரசைவாக்கம் பகுதியில் கஞ்சாவிற்ற திலீப்குமார் என்பவரை தனிப் படை காவல் துறையினர் கைது செய்தனர்அவரிடம் நடத்திய விசார ணையில் 2 காவலர்கள் தன்னிடம் கஞ்சாவை கொடுத்து விற்றுத் தருமாறு கூறிய தாக வாக்குமூலம் அளித்தார். அதில் ஒரு காவலர் ரயில் வேயில் பணிபுரிந்து வருவதும், மற்றொரு காவலர் சென்னை மாநக ரில் டி.ஜி.பி. அந்தஸ்தில் பணி புரியும் அதிகாரி ஒருவரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. விசாரணையில் காவலர்கள் இருவரும் கஞ்சா விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது.ரயில்வேயில் வேலை செய்யும் காவலர் ரயிலில் கடத்தி வரும் கஞ்சாவை பறிமுதல் செய்து அதிகாரிகளுக்கு தெரியாமல் திலீப்குமாரிடம் கொடுத்து விற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.