districts

img

காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 17,000 போலிசார்

சென்னை, ஜன. 16- காணும் பொங்கலை முன்னிட்டு, கூட்டம் அலைமோதும் என்பதால் சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடு படுகின்றனர். சென்னை முழுவதும் 15,500 காவலர்களும், 1,500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்படுகின்றனர். இதுதொடர்பாக சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாது காப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 15,500 காவ லர்கள் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதனன்று  காணும் பொங்கலை முன்னிட்டு பொது மக்கள் தங்களது குடும்பத்தினருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு அதி களவில் வருதால், எவ்வித அசம்பா விதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் அமைக்கப் பட்டும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள 7  சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்க ளில் காவல் உதவி மையங்கள் அமைக் கப்பட்டும். அவசர மருத்துவ உதவிக் காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இவை தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும்  சுமார் 200க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.

கடற்கரை மணற்பரப்பி  பாதுகாப்பு ஏற்பாடுகள் 

உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபு ரங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்படு வர். அவர்களுக்கு வான்தந்தி கருவி, மெகா போன், பைனாகுலர் ஆகியவை வழங்கப்பட்டு, வாட்சப் குழு அமைக்கப் பட்டும். பைனாகுலர் மூலம் காவலர்கள் கண்காணித்து மெகா போன் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியும். கட்டுப்பாட்டறைக்கு வான் தந்தி கருவி மூலமும். வாட்சப் குழு விலும் உடனுக்குடன் தகவல்களை வழங்குவார்கள். மேலும், 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேம ராக்கள் பொருத்தப்பட்டு தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும். காணும் பொங்கலன்று பொது மக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண் காணிப்பு மேற்கொள்ளப்படும். மேலும், குதிரைப்படையினர் மற்றும் மணற் பரப்பில் செல்லக்கூடிய 3 All Terrain Vehicle மூலம் கடற்கரை மணற்பரப்பில் காவல் ஆளினர்களால் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்படுவர். சென்னை பெரு நகர காவல் மற்றும் கடலோர காவல் குழுமத்தின் கடற்கரை உயிர் காக்கும் பிரிவின் (Antl Drowning team) 85 காவல் ஆளிநர்கள் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்காத வண்ணம் தீவிரமாக கண் காணிக்க அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளது.

பெசன்ட்நகர்  எலியட்ஸ் கடற்கரை:

பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை யில் 1 தற்காலிக காவல் கட்டுப் பாட்டறை. 3 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, காவல் ஆளிநர்களால் பைனாகுலர் மூலம் கண்காணிக்கப்படுவதுடன். ஒலி பெருக்கி மூலம் அறிவுரைகள் வழங் கப்படும். மேலும், குதிரைப்படை மற்றும் சுற்றுக் காவல் ரோந்து வாக னங்கள் மூலம் ரோந்து வரப்பட்டு, கண்காணிக்கப்படுவதுடன், ஒலி பெருக்கி மூலம் அவ்வப்போது பாது காப்பு குறித்த அறிவுரைகளும் வழங்கப்படும். 2 ஆம்புலன்ஸ் வாக னங்கள், தீயணைப்பு வாகனம், அப்பகுதியை சேர்ந்த நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் மற்றும் மோட்டார் படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். குழந்தைகள் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்கு காவல் அடை யாள அட்டை - கடற்கரைக்கு பெற்றோ ருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிச லில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை  பெருநகர காவல் மூலம் தயாரிக்கப் பட்ட அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகளில் வைக்க ப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகள் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களை நிறுத்தப்பட்டு, அடை யாள அட்டையில் குழந்தையின் பெயர். பெற்றோர் பெயர். முகவரி மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர். ஆகவே, குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மேற்கூறிய காவல் உதவி மையங்களில் அடையாள அட்டையை கடற்கரைக்குள் செல்லுமாறு அறி வுறுத்தப்படுவர். மெரினா கடற்கரை மணற்பரப்பு களில் 4 டிரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 4 ட்ரோன் கேம ராக்கள் என மொத்தம் 8 ட்ரோன்  கேமராக்கள் தீவிரமாக கண்காணிக் கப்படும். அதிக திறன் கொண்ட  டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப் பட்டு, கடலோர மணற்பகுதிகளில் காவ ல்துறையின் எச்சரிக்கை வாசகங்கள் ஒலிபரப்பப்படும்.

காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவு கூடும் மற்ற முக்கிய இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுவா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொது மக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியு டனும் காணும் பொங்கலை கொண்டாட சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் கொண்ட வணிக வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் துறை சார்பில் முக்கியமான இடங்க ளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களில் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத் தப்பட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்கு வரத்து விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். காணும் பொங்கலன்று சாலை பாது காப்பு குழுக்கள் இருசக்கர வாக னத்தில் ரோந்து சென்று பொது மக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஒட்டி களுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் தேவையான உதவிகளையும் வழங்கு வார்கள். இது மட்டுமின்றி கிண்டி. அடையாறு. தரமணி, நீலாங்கரை. துரைப்பாக்கம். மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜிஎஸ்டி ரோடு மற்றும் இதர சாலை களில் இருசக்கர வாகன பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி மேற்கொள் ளப்படும். சென்னை பெருநகர காவல்துறை யின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடு களை கடைபிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாடு மாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.