கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையிலும், அவரது வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட நகரும் புகைப்படக் கண்காட்சியை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் துவக்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன், செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், செஞ்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் விஜயகுமார் உடனிருந்தனர்.