சென்னை, நவ. 30- ஃபெஞ்சல் புயலால் எண்ணூரில் 13 செ.மீ. மழை பெய்தது. 15 அடி உயரத்திற்கும் மேலாக கடல் அலை எழுந்தது. கடற்கரை சாலையில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதிய டைந்தனர் தமிழகத்தில் அதிகபட்ச மாக 13 செ.மீ. மழை பதி வாகியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் வெள்ளிக் கிழமை இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எர்ணாவூர் பாரதி யார் நகரில் கடற்கரை சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டி களும், பொது மக்களும் அவதிப்படனர். ஒருபுறம் கடல் ஆக்ரோ ஷமாக 15 அடிக்கும் மேல் எழுந்து ஆர்ப்பரிக்கிறது. மறுபுறம் சாலையில் தண்ணீர் தேங்கி யுள்ளது. டிராக்டரில் மோட்டார் பொருத்தி தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றி கடலில் விடும் நடவடிக்கையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் ஆபத்தை உணராமல் உயரே எழும்பும் கடல் அலைகளை செல்பி எடுப்பவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.