districts

சென்னையில் பொதுக்கூட்டத்திற்கு 136 இடங்கள் அனுமதி

 சென்னை, பிப். 9 - சென்னை மாநகராட்சி தேர்தலையொட்டி பொதுக்கூட்டங்கள் நடத்த 136 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, உள்ளரங்க மாக இருப்பின் 50 விழுக்காடு அளவிலும், திறந்த வெளியாக இருப்பின் 30 விழுக்காடு அளவிலும் உதவி தேர்தல் நடத்தும் அலு வலரின் அனுமதி பெற்று கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதற்காக 136 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  இடங்கள் குறித்த விவரங்கள்https://chennaicorporation.gov.in/gcc/citizen-details/public_meeting_location/ இணைய தளத்தில் உள்ளது. வேட்பாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கூட்டங்களை நடத்தலாம். வேட்பாளர்கள் அதிகபட்சம் 20 ஆதரவாளர்களுடன் வீடு வீடாக பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம். வேட்பாளர்கள் மத, மொழி அடிப்படையில் வெறுப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையி லும் பிரச்சாரம் செய்யக் கூடாது என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.