districts

img

திருவல்லிக்கேணி, எழும்பூர் பகுதியில் புதிதாக 129 சிசிடிவி கேமரா

சென்னை, ஜூன் 24-

     திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் காவல் சரகத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 129 சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணை யர் துவக்கி வைத்தார்.

   சென்னை பெருநகரை குற்றங்களற்ற நகரமாக்கும் நோக்கில் காவல்துறையின் மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் சென்னை நகரம் முழுவ தும் பொருத்தப்பட்டு கண்காணித்து, குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நிகழ்ந்த சம்பவங்களை அறிந்து குற்றவாளிகளை கைது செய்யவும், குற்றங்க ளின் உண்மை சம்பவங் களை அறியவும் பெரிதும் உதவுகிறது.

    அதன் தொடர்ச்சியாக திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் காவல் சரகத்தில் 43 இடங்களில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 129 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணை யர் சங்கர் ஜிவால் சனிக்கிழமை (ஜூன் 24) துவக்கி வைத்தார்.

   பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவி யுடன் எழும்பூர், திருவல்லிக் கேணி, சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் பொருத்தப் பட்டுள்ள மேற்படி 129 சிசிடிவி கேமராக்களும் இணையதளத்துடன் இணைக்கப்பட்டு. 5 எம்பி  மற்றும் எஸ்.எம்.டி. தரத்து டன் வீடியோ பதிவு செய்யும் வசதி உள்ளது.

   இதில் சென்னை பெரு நகர காவல் கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா, கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் திஷா மிட்டல், திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.