மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 127வது வட்ட கிளைகள் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஞாயிறன்ற (ஜன.14) பாரதியார் நகரில் சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வை கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் மற்றும் பிலால் முஸ்தபா பொங்கல் அடுப்பை பற்ற வைத்து விழாவை துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர் சி.செங்கல்வராயன், விருகம்பாக்கம் பகுதிக்குழு உறுப்பினர் ம. நீலமேகம், கிளைச் செயலாளர்கள் சீதாகுமாரி முருகன், இரா. முருகன், அ. சுப்ரமணியன், ப. திருஞானம் மற்றும் விருகம்பாக்கம் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் செ. அருமையான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.