சென்னை, ஜூன் 29-
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற் கொண்டு வரும் தொழிலாளர் களுக்கு நலத்திட்ட உதவிக் தொகையாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் அதிக பட்சம் 3 ஆண்டுகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு கட்டுமானத் தொழி லாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற 60 வயதுக்குட்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, டயாலிசிஸ், புற்று நோய், ஆஸ்துமா, சிலிக்கோசிஸ் மற்றும் பக்க வாதம் ஆகிய தீவிர நோய்க ளால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்க ளுக்கு, தீவிர நோய் பாதிப்பு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் திட்டம் முதல்கட்டமாக 3 ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப் படும்.இந்த நிதியுதவியானது 6 மாதங்களுக்கு ஒரு முறை விடுவிக்கப்படும் என்றும் சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப் பட்டது.
அதனை செயல்படுத்தும் வகை யில், ரூ.1.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் அதற்கான நிபந்தனைக ளையும் தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ளது. அதன் படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுசெய்த கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது பதிவு அட்டையினை இணைத்து சம்பந்தப்பட்ட தொழி லாளர் உதவி ஆணையர்களிடம் இது தொடர்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
பதிவு பெற்ற கட்டுமான தொழி லாளர்கள் தீவிர நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து அரசு மருத்து வரிடம் இருந்து மருத்துவ சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தீவிர நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை (அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்) மேற் கொள்ளப்பட்டு வருவது தொடர் பான மருத்துவ ஆவணங்களை மனுவுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
தீவிர நோய் பாதிப்பு குணமடை யாமல் நீடிக்கும் நிலையினை அறிந்து கொள்ளும் பொருட்டு 2 மற்றும் 3 ஆண்டிற்கு சிகிச்சைக்கான மருத்துவ ஆவணங்களை கேட்பு மனுவுடன் இணைத்து அளிக்க வேண்டும் என்றும், ஆண்டொன்றுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் இந்த நலத்திட்டம் முதல்கட்டமாக 3 ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிர நோய் பாதிப்பு உதவித் தொகையானது மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் 6 மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரு முறை தொழிலாளர்களின் வங்கி கணக் கிற்கு நேரடியாக வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.