சென்னை,ஆக.9-
வட சென்னை பகுதி மேம்பாட்டிற் காக வட சென்னை வளர்ச்சி திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு உருவாக்கி ரூ.1000 கோடியை ஒதுக்கி 3 ஆண்டுகளில் செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வடசென்னை யில் வளர்ச்சி பற்றிய திட்ட அறிக் கையை தயாரிக்கும் பணியில் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் ஈடு பட்டுள்ளனர். எனினும் வட சென்னை பகுதி மக்களிடம் நேரடியாக கருத்து கேட்பு நடத்தி அவர்கள் தங்களது பகுதியின் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறார்கள்? அவர்களது திட்டம் என்ன? என்பது பற்றி அறிய திட்டமிடப் பட்டது. அதன்படி கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் வட சென்னையின் வளர்ச்சி திட்டம், சமூக-பொருளா தார, உளவியல் நலன் பற்றிய கணக் கெடுக்கும் பணியை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வடசென் னையின் வளர்ச்சி தொடர்பாக கருத்து கேட்பு கணக்கெடுப்பு சென்னைப் பெரு நகர வளர்ச்சிக் குழுமம், சென்னை மாநகராட்சி , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்ககம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து மேற் கொண்டது. இதில் பெண்கள் கிறிஸ் துவ கல்லூரியில் இருந்து 500 மாணவி கள், 22 பேராசிரியர்கள் மற்றும் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இருந்து 500 மாணவ-மாணவிகள், 42 பேராசிரியர்கள் என மொத்தம் 1000 மாணவர்கள் இந்த கணக்கெடுப்பு பணி யில் ஈடுபட்டனர். திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், மற்றும் அண்ணாநகர் ஆகிய 7 மண்ட லங்களில் 1000 மாணவர்கள் தலா 10 பேர் வீதம் 100 குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணியினை மேற் கொண்டனர். இதனை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
மாணவர்கள் இந்த 7 மண்டலங் களிலும் வீடு, வீடாக சென்று வடசென் னையின் வளர்ச்சி மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர். இதற்காக மொத்தம் 96 கேள்விகள் தயாரிக்கப்பட்டு இருந்தது. அந்த கேள்விகளை மாணவர்கள் பொது மக்களிடம் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டனர். மாணவர்கள் நடத்திய கருத்து கேட்பு கணக்கெடுப்பில் பெரும்பாலான பொதுமக்கள் குடிநீர் மற்றும் போக்குவரத்து நெரி சல் குறித்தே கூறி உள்ளதாக தெரி கிறது. வடசென்னையை பொறுத்த வரை போக்குவரத்து பயணம் என்பது சவாலாகவே உள்ளது. இதனை சரி செய்ய சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். இதேபோல் காசிமேடு பகுதி மக்கள் மீன்பிடி துறை முக பகுதியை நவீனப்படுத்த வேண்டும் எனவும், எண்ணூர் பகுதி மக்கள் திருவொற்றியூர் விம்கோநகர் வரை உள்ள மெட்ரோ ரெயில் சேவையை 1 கி.மீட்டர் தூரம் மேலும் நீட்டித்து எண்ணூர் வரை இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மணலி பகுதியில் காற்றுமாசுவை தடுக்கவும், குடிநீர், கழிவுநீர் கால்வாய் வசதிகள் குறித்தும் கூறி இருக்கிறார் கள். காசிமேடு முதல் நெட்டுக்குப்பம் வரை உள்ள கடற்கரை பகுதியை மெரினா போன்று அழகு படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.