செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், தத்தலூர் கிராமத்தில் மக்களவைத்தேர்தலில் பொதுமக்கள் 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக தேர்தல் விழிப்புணர்வு பேரணி மாவட்ட தேர்தல் அலுவலர் ச.அருண்ராஜ், தலைமையில் நடைபெற்றது. திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா, கூடுதல் ஆட்சியர் செல்வி.அனாமிகா ரமேஷ், உதவி ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், வேளாண்மை இணை இயக்குநர் அசோக், அரசு அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.