மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் வே.ரா. சுப்புலட்சுமி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அனைவரும் வாக்களிக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மாலதி, மகளிர் திட்ட இயக்குநர் யு. நாகராஜன், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.