districts

img

மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்திய பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சி

ராணிப்பேட்டை, மே. 8 – இந்தியா கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திரு மாவளவன் ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் பகுதியில் செவ்வாயன்று (மே. 7) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்திற்கு அவர் செல்லும் போது  ராணிப்பேட்டையில்  விசிக மத்திய மாவட்ட செயலாளர் சீமா. ரமேஷ் கர்ணா தலைமையில் அவருக்கு உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,  தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சி சாதனை கள் தான் திமுக தலைமையிலான கூட்டணி யில் வெற்றிக்கு அச்சாணியாக அமைந்திருப்பதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும் என தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தில் விசிக போட்டியிடும் தொகுதிகளை தவிர்த்து பிற தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். 10 ஆண்டுகால ஆட்சியில் பாஜக கட்சிக்கு மிகவும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் அதிலும் மூன்றாவது முறையாக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டு இருப்பதே இந்தியா கூட்டணி கட்சியின் வெற்றிக்கு ஆதாரமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.  தமிழகத்தில் மக்களின் வரவேற்பை பெற்று திமுக அரசு 4ஆம்ஆண்டில் அடி எடுத்து வைத்திருப்பதை வரவேற்பதாகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் திருமாவளவன் தெரி வித்தார்.