உச்சநீதிமன்ற தீர்ப்பு படி ஊழியர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், உதவியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் பணிக்கொடையாக தர வேண்டும், சிலிண்டர் பில்லில் உள்ள முழுத் தொகையையும் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (ஏப். 26) சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.