விழுப்புரம்,செப்.9- விழுப்புரம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1 டன் ரேசன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர். விழுப்புரம் அருகே வெண்மணியாத்தூர் பகுதியில் காணை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக திருக்கோவிலூர் மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு வாகனத்தை காவல்துறையினர் வழி மறித்து சோதனை செய்தனர். அப்போது, 17 சாக்கு மூட்டைகளில் 1,000 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு, காவல்துறையினர் நடத்திய விசார ணையில் அரிசி கடத்தி வந்த நபர் கள்ளக்குறிச்சி மாவட்டம், எம்.புதூர் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (23) என்பது தெரியவந்தது. அவர் திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி அதை வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. பின்னர், பிரவீன்குமாரை கைது செய்து அவரிடமிருந்த 1 டன் ரேசன் அரிசி மூட்டைகளும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாக னத்தையும் பறிமுதல் செய்து, விழுப்பு ரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.