சென்னை, அக். 30 - காதுகேளாதோர், வாய் பேசாதோருக்கு அரசுப் பணிகளில் ஒரு விழுக்காடு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தி உள்ளது. உலக காது கேளாத, வாய் பேசா தோர் தினம் ஆண்டுதோறும் செப். 29 கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய நாளில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட ஆட்சியர்களி டத்தில் காது கேளாத, வாய் பேசாதோரின் கோரிக்கை மனுக்களை அளித்து வரு கின்றனர். இதனையொட்டி இந்த ஆண்டு திங்களன்று (செப்.30) சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே விடம், சங்கத்தின் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.மனோன்மணி, பி.பவானி உள்ளிட்டோர் மனு அளித்தனர். அதில், மாற்றுத்திறனாளி களுக்கு உதவித்தொகையை உயர்த்த வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு துறை வாயிலாக மாதாந்திர உதவித்தொகையை வழங்க வேண்டும், அரசு அலுவலகங்களிலும் மற்றும் பொது இடங்களில் சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும், காவல்துறையில் புகார் அளிப்பதற்கு வசதியாக வாட்ஸ்அப் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் புகார்கள் மீது, காவல்துறை மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.