திருவள்ளூர்,டிச.10- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அண்மையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் செம்பரம் பாக்கம் ஏரியில் இருந்து சுமார் 8 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப் பட்டது. பின்னர் மழை குறைந்த தால் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு படிப் படியாக குறைக்கப்பட்டது. ஞாயிறன்று காலை நில வரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து 1091 கனஅடியாக குறைந்து உள்ளது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பும் 1500 கனஅடியாக குறைக் கப்பட்டுள்ளது. செம்பரம் பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 22.64 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் 3284 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.இதேபோல் புழல், சோழவரம் ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது. புழல் ஏரிக்கு காலை நிலவரப்படி 239 கனஅடி மட்டுமே தண்ணீர் வருகிறது. இதனால் உபரிநீர் திறப்பு 239 கன அடியாக உள்ளது. ஏரியின் மொத்த உயரமான 21.20 அடியில் 20.21 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3300மி.கனஅடியில் 3054மி.கன அடி தண்ணீர் நிரம்பி இருக்கி றது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081மி.கனஅடியில் 790மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 750 கனஅடி தண்ணீர் வருகிறது. 1456 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2924மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 1610கனஅடிதண்ணீர் வருகிறது. 1009 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி முழுவதும் நிரம்பி உள்ளது.