districts

img

1,364 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

சென்னை, ஜன. 5- சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த நட்சத்திர ஆமைகளை சென்னை சரக்கு விமான போக்கு வரத்து சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 230 கிலோ உயிர் நண்டுகளை ஏற்றுமதி செய்வதாக ஆவ ணங்களை அளித்துவிட்டு, அதற்கு பதில் உயிர் நட்சத்திர ஆமைகளை கடத்த திட்டமிடப்பட்டு இருந்தது சுங்க அதிகாரிகளின் சோதனையில் தெரிய வந்தது.  இதையடுத்து ஏற்றுமதி செய்ய இருந்த 13 பார்சல்களில் 7 பார்சலில் 1,364 நட்சத்திர ஆமைகள் உயிருடன்  இருந்ததாகவும், இத்தகைய உயிரினங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972இன்படி, பறிமுதல் செய்யப்பட்ட இந்த நட்சத்திர ஆமைகளின் மறுவாழ்வு மற்றும் இயற்கை வாழ்விடங்களை உறுதி செய்வ தற்காக தமிழ்நாடு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும், இந்த கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.