சென்னை, ஆக. 14-
திருவொற்றியூர் காலடிப் பேட்டையில் வெளி மாநிலத்திற்கு கடத்த இருந்த 1,300 கிலோ ரேஷன் அரிசியை காவல் துறை யினர் பறிமுதல் செய்துள்ள னர்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வுத் துறை அதிகாரிகள் காலடிப்பேட்டையில் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மடக்கினர். அதி காரிகளைக் கண்டதும் வேனை நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார்.
வேனை சோதனை போது, அதில் 26 மூட்டை களில் 1,300 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டதில் கடத்தல் சம்பவத்திற்கு சத்யா என்ற பெண் தான் மூளையாக செயல்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சத்யா மற்றும் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.