சிவகங்கை, ஜூன் 8- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட 9ஆவது மாநாடு தேவகோட்டை யில் ஜூன் 4, 5 ஆகிய நாட்களில் நடை பெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலை வர் ஜீவசிந்தன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் இராசேந்தி ரன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி தொடக்க உரை நிகழ்த்தினார். செயலாளர் அறிக்கையை மாவட்டச் செயலாளர் சங்கர சுப்பிரமணியன், கலை இலக்கியப் பண்பாட்டு அறிக்கை யை மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்க்கனல் , நிதிநிலை அறிக்கையை மாவட்டப் பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் சமர்ப்பித்தனர். அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பேரா சிரியர் கோபிநாத், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் பேராசிரியர் முருகன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட் டத் தலைவராக பேராசிரியர் தங்க முனி யாண்டி மாவட்டச் செயலாளராக ஆசிரி யர் அன்பரசன், மாவட்டப் பொருளாள ராக பாலமுருகன் மற்றும் 13 செயற்குழு உறுப்பினர்கள், 41 புதிய மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.மாவட்டக்குழு உறுப்பினர் அன்பரசன் நன்றி கூறினார். முன்னதாக மாநாட்டின் தொடக்க நாளில் தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி முன்பிருந்து கலைப் பேரணியை இந்தியாவுக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மருத்துவர் ஏழு மலை தொடங்கி வைத்தார். மாநாட்டு அரங்கில் நடைபெற்ற ஓவிய புகைப்படக் கண்காட்சியை ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஞானம் திறந்து வைத்தார். மாநாட்டில் தேவகோட்டை நகரில் அரசு விவசாய கல்லூரி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும், வரலாற்று சிறப்பு வாய்ந்த சங்கரபதி கோட்டையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என் பன உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அன்று மாலை அழகப்பா பூங்கா அருகில் நடைபெற்ற கலை இலக்கிய இரவு நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் போஸ் தலைமை தாங்கினார். நகர்மன்றத் தலைவர் சுந்தர லிங்கம், நகர்மன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிவகங்கை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் முனைவர் செந்தில் குமார் பங்கேற்றார். மாநில அளவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பள்ளி கல்லூரி மாணவர்களைப் பாராட்டி பரிசு கள், கேடயங்கள் வழங்கப்பட்டன. கரி சல் கருணாநிதி குழுவினரின் கிராமியப் பாடல்கள், திண்டுக்கல் சக்தி குழுவின ரின் பறை இசை, கங்கை கருங்குயில் மற்றும் வேம்பத்தூரான் குழுவினரின் கொம்பு இசை மற்றும் கும்மிப் பாடல் கள், புதுகை பூபாளம் குழுவினரின் நையாண்டி தர்பார் முதலான நிகழ்வு கள் நடைபெற்றன.